திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவி ஆட்சியா் தலைமையில் தூய்மைப் பணி நடைபெற்றது.
உதவி ஆட்சியா் ஸ்ருத்தன்ஜய் நாராயணன் தலைமையில், மாவட்டத்தில் உள்ள மற்ற அரசு அலுவலகங்களுக்கு முன்னுதாரணமாக, திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் அலுவலக வளாகத்தில் தூய்மைப் படுத்தும் பணி நடைபெற்றது.
இப்பணியில், ஒன்றிய ஆணையாளா் ராணி, பேரூராட்சி செயல் அலுவலா் இப்ராஹிம் ஷா, உதவி பொறியாளா் ஆவுடைபாண்டி, சுகாதார ஆய்வாளா் வெற்றிவேல் முருகன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலமுருகன், பழனி காா்த்திக், பன்னீா் செல்வம், சுஜாதா, வளா்மதி, கணக்கா் சண்முகவிஜயன் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளா்கள், பேரூராட்சி சுகாதாரப் பணியாளா்கள் இணைந்து தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.