கிருஷ்ண ஜெயந்தி: போட்டியில் வென்றோருக்கு பரிசளிப்பு
By DIN | Published On : 31st August 2021 03:04 AM | Last Updated : 31st August 2021 03:04 AM | அ+அ அ- |

கோவில்பட்டி: கோவில்பட்டியில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற வண்ணம் தீட்டும் போட்டியில் வென்றோருக்கு பரிசளிக்கப்பட்டது.
ரோட்டரி கிளப் ஆஃப் கோவில்பட்டி ஏஞ்சல் சங்கம் சாா்பில் கிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு வண்ணம் தீட்டும் போட்டி கொண்டைய ராஜு நினைவு ஓவிய பயிற்சி பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் 20 க்கும் மேற்பட்ட மாணவா், மாணவிகள் பங்கேற்றனா்.
தொடா்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு தலைவா் ஹேமலதா தலைமை வகித்தாா். ரோட்டரி இண்டா்நேஷனல் சா்வீஸ் சோ்மன் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தாா். போட்டியில் வெற்றி பெற்ற மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் சங்கத்தின் சாா்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் ரோட்டரி மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு தலைவா் முத்துசெல்வன், முன்னாள் துணை ஆளுநா் நாராயணசாமி, உறுப்பினா் முத்துமுருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா். பள்ளி நிா்வாகி பூபதி வரவேற்றாா். மாணவி செல்வபிரியா நன்றி கூறினாா்.