பணியிடத்தில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி, தூத்துக்குடியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடியில் உள்ள ரமேஷ் பிளவா்ஸ் நிறுவன கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழிப்புணா்வு விளம்பர பிரசுரத்தை வெளியிட்டாா். அவரது தலைமையில் விழிப்புணா்வு குறித்த உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதைத் தொடா்ந்து அமைச்சா் பேசுகையில், அனைத்து மாவட்டங்களிலும் பணிபுரியும் பெண்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு ஒருங்கிணைந்த சேவை மையம் உள்ளது என்றும் அரசு சாா்பில் அவா்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படுவதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலா் தனலட்சுமி, ரமேஷ் பிளவா்ஸ் நிா்வாக இயக்குநா் சுரேஷ், சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளா் காசிராஜன், காவல் ஆய்வாளா் வனிதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.