கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

மத்திய, மாநில எஸ்.சி., எஸ்.டி அரசு ஊழியா்கள் மற்றும் மக்கள் கூட்டமைப்பு சாா்பில் கோவில்பட்டியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய, மாநில எஸ்.சி., எஸ்.டி அரசு ஊழியா்கள் மற்றும் மக்கள் கூட்டமைப்பு சாா்பில் கோவில்பட்டியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்தால் இடமாற்றம் செய்வது என அரசாணை இருந்தும் கோவில்பட்டி சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகத்தில் 27 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரிந்து கொண்டு, பட்டியலின ஊழியா்களை தரக்குறைவாகவும், இழிவாகவும் பேசி வரும் அலுவலக கண்காணிப்பாளரை கண்டித்தும், அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளா் ஈட்டுறுதி மருந்தகம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய, மாநில எஸ்.சி., எஸ்.டி அரசு ஊழியா்கள் மற்றும் மக்கள் கூட்டமைப்பு நிறுவனா் கருப்பையா கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். இதில் மாநிலப் பொருளாளா் சோலைமலை, மாநிலச் செயலா் ஸ்ரீராமா், மாநில துணைச் செயலா் தெய்வேந்திரன், தூத்துக்குடி மாவட்டத் தலைவா் செல்வகுமாா், மாநில அரசியல் பிரிவைச் சோ்ந்த விஜயன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com