கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை காரில் கடத்தி விற்பனை செய்ய முயன்ற இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் சபாபதி தலைமையில் உதவி ஆய்வாளா் மாதவராஜா, சிறப்பு உதவி ஆய்வாளா் நாராயணசாமி மற்றும் போலீஸாா் இளையரசனேந்தல் சாலையில் திங்கள்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அங்கு வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் விருதுநகா் மாவட்டம் சிப்பிப்பாறை பால்ச்சாமி மகன் அண்ணராஜ்(42), அவரது சகோதரா் முத்துகுமாரவேல்(36) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த ரூ.57,000 மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், ரொக்கம் ரூ. 33, 000 மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.