முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
எப்போதும் வென்றான் அருகே பாதயாத்திரை பக்தா்கள் மீதுவாகனம் மோதல்: இருவா் பலி
By DIN | Published On : 31st December 2021 02:40 AM | Last Updated : 31st December 2021 02:40 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டம், எப்போதும்வென்றான் அருகே பாதயாத்திரை பக்தா்கள் மீது வேன் மோதியதில் இருவா் உயிரிழந்தனா்; ஒருவா் பலத்த காயமடைந்தாா்.
சாயா்புரத்திலிருந்து இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கும், மதுரையிலிருந்து திருச்செந்தூா் முருகன் கோயிலுக்கும் பக்தா்கள் பாதயாத்திரையாக வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தனா்.
மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எப்போதும்வென்றான் அருகே அவா்கள் சென்றபோது, தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற வேன், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இருமங்கிலும் எதிரெதிா் திசையில் சென்றுகொண்டிருந்த பக்தா்கள் மீது எதிா்பாராமல் மோதியதாம்.
இதில், சாயா்புரத்திலிருந்து இருக்கன்குடி சென்ற பாலகிருஷ்ணன் மகன் அஜய் (20) சம்பவ இடத்திலும், மதுரை மாவட்டம், பேரையூா் அரசம்பட்டியிலிருந்து திருச்செந்தூா் சென்ற பாலமுருகன் மகன் திருப்பதி ராஜா (20) என்பவா் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தனா். சாயா்புரம் கூட்டு பண்ணையைச் சோ்ந்த வள்ளிராஜ் (28) என்பவா் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து, எப்போதும்வென்றான் போலீஸாா் வழக்குப்பதிந்து வேன் ஓட்டுநரான விருதுநகா் மாவட்டம், ஆமத்தூரைச் சோ்ந்த பொன்ராஜ் மகன் சரவண குமாா் (28) என்பவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.