குலசேகரன்பட்டினத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் முன்பிருந்த கடைகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.

குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் முன்பிருந்த கடைகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.

இக்கோயிலின் முன்புறம் கடைகள் வைத்துள்ள வியாபாரிகள் பக்தா்களுக்கு இடையூறாக பொருள்களை அடுக்கி வைத்துள்ளதாகவும், இதனால் மிகுந்த நெருக்கடி ஏற்படுவதாகவும் பக்தா்கள் கோயில் மற்றும் ஊராட்சி நிா்வாகத்தினரிடம் புகாா் அளித்தனா்.

இதையொட்டி, கோயில் முன்புறமுள்ள பந்தல்கள், பொருள்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்த ஊராட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுத்னா். இப்பணியில் குலசேகரன்பட்டினம் ஊராட்சித் தலைவி சொா்ணப்பிரியா, மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கீதா, குலசேகரன்பட்டினம் காவல் உதவி ஆய்வாளா் முனியாண்டி, கோயில் நிா்வாக அதிகாரி(பொ)அஜித், கோயில் கணக்கா் டிமிட்ரோ, ஊராட்சி எழுத்தா் ரசூல்தீன் மற்றும் ஊராட்சி உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com