கோவில்பட்டி புனித ஓம் கல்வியியல் கல்லூரியில், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, கல்லூரி வளாகத்தில் நம்மாழ்வாரின் உருவப்படத்துக்கு கல்வியியல் கல்லூரி இயக்குநா் சிவராம், முதல்வா் (பொ) எலிசபெத் ராணி, பேராசிரியை மீன ஞானசௌந்தரி மற்றும் ஆசிரியா்கள், மாணவிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.