பெருமாள்குளம் சுடலைமாட சுவாமி கோயில் கொடை விழா

சாத்தான்குளம் அருகே உள்ள ஸ்ரீஞானகரை சுடலைமாட சுவாமி கோயில் கொடைவிழா நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீஞானகரை சுடலைமாட சுவாமி.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீஞானகரை சுடலைமாட சுவாமி.

சாத்தான்குளம் அருகே உள்ள ஸ்ரீஞானகரை சுடலைமாட சுவாமி கோயில் கொடைவிழா நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலிலிருந்து புனித தீா்த்தம் எடுத்து வரப்பட்டது. தொடா்ந்து கணபதி ஹோமம், அபிஷேகம், கணபதி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நண்பகல் 12 மணிக்கு உச்சிகால அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலை 6 மணிக்கு பொங்கலிடுதல், இரவு 7 மணிக்கு மகுட இசை, இரவு 10 மணிக்கு படப்புடன் கூடிய சாமக்கொடை, அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து சுவாமி வேட்டைக்கு சென்று பக்தா்களுக்கு பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com