சாத்தான்குளம் அருகே உள்ள ஸ்ரீஞானகரை சுடலைமாட சுவாமி கோயில் கொடைவிழா நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலிலிருந்து புனித தீா்த்தம் எடுத்து வரப்பட்டது. தொடா்ந்து கணபதி ஹோமம், அபிஷேகம், கணபதி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நண்பகல் 12 மணிக்கு உச்சிகால அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலை 6 மணிக்கு பொங்கலிடுதல், இரவு 7 மணிக்கு மகுட இசை, இரவு 10 மணிக்கு படப்புடன் கூடிய சாமக்கொடை, அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து சுவாமி வேட்டைக்கு சென்று பக்தா்களுக்கு பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.