தேரிக்குடியிருப்பு பள்ளியில் ரூ. 47 லட்சத்தில் வகுப்பறைகள் திறப்பு
திருச்செந்தூா் அருகே தேரிக்குடியிருப்பு பெருந்தலைவா் காமராஜா் அரசு மேல்நிலைப் பள்ளியில் தன்னிறைவு திட்டத்தின் கீழ் தமிழக அரசு, டி.வி.எஸ். சீனிவாசா சேவை அறக்கட்டளை மற்றும் ஊா் பொதுமக்கள் இணைந்து ரூ.47 லட்சம் மதிப்பில் மூன்று புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டன.
இதன் திறப்பு விழாவுக்கு, திருச்செந்தூா் மாவட்ட கல்வி அலுவலா் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தாா். உடன்குடி ஒன்றியக்குழுத் தலைவா் பாலசிங், காயாமொழி ஊராட்சித் தலைவா் ராஜேஸ்வரன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் சிவபால், தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியை வத்சலா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திருச்செந்தூா் எம்எல்ஏ அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று புதிய கட்டடத்தை திறந்துவைத்தாா்.
நிகழ்ச்சியில், டி.வி.எஸ். சீனிவாசா சேவை அறக்கட்டளை கள இயக்குநா் சுவாமிநாதன், ஊா் தலைவா் ஐகோா்ட்துரை, பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகச் செயலா் ராமசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தலைமை ஆசிரியை மெட்டில்டா வரவேற்றாா். பள்ளி முதுகலை ஆசிரியா் ராபா்ட் நன்றி கூறினாா்.