திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தை உத்திர வருஷாபிஷேகம் திங்கள்கிழமை (பிப். 1) நடைபெறுகிறது.
திருச்செந்தூா் கோயிலில் மூலவரான சுப்பிரமணியா் பிரதிஷ்டை செய்யப்பட்டது தை உத்திர நட்சத்திரத்தில் ஆகும். எனவே, ஆண்டுதோறும் தை மாதம் உத்திரநட்சத்திர தினத்தில் இத்திருக்கோயிலில் வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.
நிகழாண்டு தை உத்திர வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு விமான கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
தொடா்ந்து காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது. இரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாமல் புஷ்பாஞ்சலி நடைபெறும் என திருக்கோயில் வட்டாரம் தெரிவித்துள்ளது.