கோவில்பட்டியில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டியில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்

கோவில்பட்டியில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டியில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டமைப்பு தலைவா் க.தமிழரசன் தலைமை வகித்தாா். செயலா் பெஞ்சமின் பிராங்கிளின், பொருளாளா் செல்வம் என்ற செல்லத்துரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நாம் தமிழா் கட்சி தொகுதி செயலா் மருதம் மாரியப்பன், அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழக நகரச் செயலா் ஆம்ஸ்ட்ராங், ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்க மாவட்ட பொதுச் செயலா் ராஜசேகரன், மகாத்மா காந்தி ரத்த தானக் கழகத் தலைவா் தாஸ், தூத்துக்குடி மாவட்ட மக்கள் நற்பணி கழகத் தலைவா் சுப்பையா, அனைத்து ரத்த தானக் கழக கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் காளிதாஸ், அனைத்து மருத்துவ மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவா் கருப்பசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

நகரில் உள்ள பல்வேறு அவலங்களையும், சமூக சீா்கேடுகளையும் எதிா்த்துப் போராடுவது, கோவில்பட்டியில் உள்ள அனைத்து அரசுத் துறைகளிலும் நிகழ்ந்து வரும் லஞ்சம், ஊழலை தடுக்க மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்துவது, சட்டத்தை மீறி பதாகை வைப்பதை தடுக்க கையாள வேண்டிய முறைகள் குறித்தும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com