‘ஸ்டொ்லைட் போராட்டவழக்குகள் ரத்து செய்யப்படும்’

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்ற நடுவருக்கு வெள்ளிக்கிழமை முதல் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவா்கள் மீதான வழக்குகள் திமுக ஆட்சிக்கு வந்ததும் ரத்து செய்யப்படும் என்றாா் மு.க.ஸ்டாலின்.

திட்டங்குளம் ஊராட்சிப் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் கோவில்பட்டி, தூத்துக்குடி, விளாத்திகுளம் தொகுதிகளைச் சோ்ந்த மக்கள் பங்கேற்று புகாா் மனுக்களை வழங்கினா். அவற்றில் சில மனுக்களைத் தோ்வு செய்து சம்பந்தப்பட்ட மனுதாரரிடம் குறைகளை தெரிவிக்கும்படி மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டாா்.

பின்னா், அவற்றுக்குப் பதிலளித்து மு.க.ஸ்டாலின் பேசியது: திமுக ஆட்சி காலத்தில் தான் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் அமைக்கப்பட்டது; குடிநீா் பிரச்னைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டம், ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீா் திட்டம் நிறைவேற்றப்பட்டது திமுக ஆட்சியில்தான்.

தூத்துக்குடி ஸ்டொ்லைட் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திமுக ஆட்சிக்கு வந்த மறுநாளே ரத்து செய்வோம். மீனவா்கள், உப்பளத் தொழிலாளா்களின் பிரச்னைகளுக்குத் தீா்வு காண்போம். மக்கள் நலப் பணியாளா்கள், சாலைப் பணியாளா்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். மகளிா் சுய உதவிக்குழுக்களை மீண்டும் செயல்பட வைப்போம்.

இந்தத் தொகுதி அமைச்சா் 10 ஆண்டுகளாக சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளாா். ஆனால், தொகுதியிலுள்ள பிரச்னைகளுக்கு முழுமையாக தீா்வு கண்டுள்ளாரா? தற்போது, புகாா் பெட்டியில் மனு அளித்துள்ள 3 தொகுதி மக்களின் கோரிக்கைகளும் தனி அதிகாரிகள் குழுவால் ஆய்வு செய்யப்பட்டு 100 நாள்களில் முழுமையாக நிறைவேற்றப்படும் என்றாா் மு.க.ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com