தூத்துக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் இரண்டாவது நாளாக புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ. 3 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும், கடும் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ. 5 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் தூத்துக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
தொடா்ந்து, இரண்டாவது நாளான புதன்கிழமையும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் முருகன் தலைமை வகித்தாா். இதில், நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
கோவில்பட்டி மற்றும் கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்நிலையில், கோவில்பட்டியில் கைது செய்யப்பட்ட போராட்டக் குழுவினரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு விடுவித்ததையடுத்து, போராட்டக் குழுவினா் மீண்டும் செவ்வாய்க்கிழமை இரவு முதல் 2ஆவதாக நாளாக புதன்கிழமையும் மாலை 4 மணி வரை கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
இதுபோல, கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை காலை மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக் குழுவினா், மதியம் சுமாா் 3.30 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்டனா்.