கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இடைநிலை ஆசிரியா்களின் ஊதிய நிா்ணய அநீதிகளை களைய வேண்டும். அனைத்து ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.
பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பின் சாா்பில் கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, செல்வராஜ் தலைமை வகித்தாா். ஜாக்டோ ஜியோ உயா்மட்டக் குழு உறுப்பினா் மயில், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழகத்தைச் சோ்ந்த சூரியபிரம்மன், தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகத்தைச் சோ்ந்த சிவகுமாா் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். இதில், ஜாக்டோ ஜியோ அமைப்பினா் திரளானோா் கலந்து கொண்டனா்.