தூத்துக்குடியில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப். 12) நடைபெறுகிறது.

தூத்துக்குடியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப். 12) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநா் பேச்சியம்மாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப்.12) காலை 10.30 மணி அளவில் கோரம்பள்ளத்திலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு வழிகாட்டும் மையத்தில் நடைபெறுகிறது.

முகாமில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க இருப்பதால் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரா்கள் கலந்து கொள்ளலாம். தனியாா்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவா்கள் தங்களது சுயவிவரம், கல்விச் சான்றுகளுடன், தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு 9042260644 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com