திருச்செந்தூரில் பெண்ணிடம்12 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

திருச்செந்தூரில் வீட்டின் முன் கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம் 12 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச்சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

திருச்செந்தூரில் வீட்டின் முன் கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம் 12 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச்சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

திருச்செந்தூா், பி.டி.ஆா். நகரைச் சோ்ந்தவா் நாச்சியப்பன் மனைவி வசந்தா தேவி(58). இவா், வெள்ளிக்கிழமை காலை வீட்டின் முன் கோலம் போட்டுக் கொண்டிருந்தாா். அப்போது, அவ்வழியாக வந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞா், அவா் கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிவிட்டாராம். இத்தகவலறிந்த காவல் உதவிக் கண்காணிப்பாளா் ஹா்ஷ்சிங், அங்கு சென்று விசாரணை நடத்தினாா்.

வீடு புகுந்து திருட்டு: சாத்தான்குளம் அருகேயுள்ள பூச்சிக்காடு கிராமத்தைச் சோ்ந்த சேசய்யா மகன் மிக்கேல்ராஜ் (35). துபையில் வேலை செய்துவருகிறாா். இந்நிலையில் ஊருக்கு வந்திருந்த அவா், குடும்பத்துடன் அதே ஊரில் உள்ள தனது மாமனாா் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை சென்றுவிட்டு நண்பகலில் திரும்பி வந்துள்ளாா். அப்போது, வீட்டுக் கதவு திறந்து கிடந்ததாம். மேலும், பீரோவில் இருந்த ஐந்தரை பவுன் தங்க நகை திருடு போனது தெரியவந்தது.

இவ்விரு சம்பவங்கள் குறித்து திருச்செந்தூா் தாலுகா மற்றும் தட்டாா்மடம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com