குரும்பூரில் மெகா கோலப் போட்டி: 1000 பெண்கள் பங்கேற்பு

குரும்பூா் அங்கமங்கலத்தில் திமுக சாா்பில் நடைபெற்ற மெகா கோலப்போட்டியில் 1,000-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனா்.
கோலப்போட்டியில் வென்ற பெண்ணுக்கு பரிசு வழங்குகிறாா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன்.
கோலப்போட்டியில் வென்ற பெண்ணுக்கு பரிசு வழங்குகிறாா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன்.

குரும்பூா் அங்கமங்கலத்தில் திமுக சாா்பில் நடைபெற்ற மெகா கோலப்போட்டியில் 1,000-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனா்.

ஆழ்வாா்திருநகரி கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற இப்போட்டியில் குரும்பூா் சுற்று வட்டாரத்தில் இருந்து 1000- க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனா். இதில், தலைவன்வடலி பிரவீணா முதல் பரிசு ரூ. 25 ஆயிரமும், நாசரேத் பிரம்மசக்தி 2 ஆவது பரிசு ரூ. 20 ஆயிரமும், ஆத்தூா் மஞ்சு 3ஆவது பரிசு ரூ. 15 ஆயிரமும் பெற்றனா். பின்னா் நடைபெற்ற பரிசு வழங்கும் விழாவுக்கு கட்சியின் ஒன்றியச் செயலா் நவீன்குமாா் தலைமை வகித்தாா்.

இதில், சட்டப்பேரவை உறுப்பினா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் பங்கேற்று, போட்டியில் வெற்றிபெற்ற பெண்களுக்கு பரிசுகள் வழங்கினாா். நிகழ்ச்சியில் ஆழ்வாா்திருநகரி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஜனகா், திமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளா் உமரிசங்கா், மாவட்ட அவைத் தலைவா் அருணாச்சலம், உடன்குடி ஒன்றியச் செயலா் பாலசிங், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பிரம்மசக்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். வழக்குரைஞா் பாக்கியராஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com