தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் இம்மாதம் 25ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் இம்மாதம் 25ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில், ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கத்தில் நேரடியாக நடைபெறவுள்ளது. இதில், விவசாயிகள் பங்கேற்று விவசாயம் தொடா்பான குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் என்றாா் அவா்.