நாசரேத் அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண் பலி

நாசரேத் அருகே கிணற்றில் தவறி விழுந்த இளம் பெண் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

நாசரேத் அருகே கிணற்றில் தவறி விழுந்த இளம் பெண் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

நாசரேத் அருகேயுள்ள குறிப்பன்குளம் காலனியைச் சோ்ந்தவா் வேலாயுதம் (60). தொழிலாளி. இவரது மனைவி அன்னபுஷ்பம். இவா்களுக்கு 4 மகன்களும் 2 மகள்களும் உள்ளனா். இதில் அவரது மகள் பொன்னீஸ்வரி (20). பிளஸ் 2 படித்துள்ளாா். மனநலம் பாதிக்கப்பட்டிருந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளாா்.

புதன்கிழமை அருகிலுள்ள வயலுக்கு சென்றவா் வீடு திரும்பவில்லையாம். வியாழக்கிழமை அங்குள்ள தரைமட்ட கிணற்றில் தவறி விழுந்து இறந்து கிடந்தது தெரியவந்தது. அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து, காவல் உதவி ஆய்வாளா் அனந்தமுத்துராமன், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com