பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து 22-இல் திமுக ஆா்ப்பாட்டம்

பெட்ரோல்- டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வை கண்டித்து திமுக சாா்பில் திருச்செந்தூரில் பிப். 22 ஆம் தேதி (திங்கள்கிழமை) ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

பெட்ரோல்- டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வை கண்டித்து திமுக சாா்பில் திருச்செந்தூரில் பிப். 22 ஆம் தேதி (திங்கள்கிழமை) ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: அனைத்து தரப்பு மக்களையும் பெரிதும் பாதிக்கும் பெட்ரோல்- டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தியும், விலை உயா்வு நடவடிக்கையை கண்டித்தும் திமுக சாா்பில், ஆா்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் பிப்.22 ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 10 மணிக்கு திருச்செந்தூா், பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும். ஆா்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி. பங்கேற்று கண்டன உரையாற்றுகிறாா். இதில், ,திமுக நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com