குலசேகரன்பட்டினத்தில் புதிதாக சீரமைக்கப்பட்ட கைப்பந்து மைதான திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா்அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தனது சொந்தப் பணத்தில் வழங்கிய தொகை மூலம் குலசேகரன்பட்டினம் ஹஸனியா பள்ளி முன்பிருந்த கைப்பந்து மைதானம் சீரமைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, அந்த மைதானத்தை எம்எல்ஏ வியாழக்கிழமை திறந்துவைத்து வீரா்களை வாழ்த்தினாா். இதில், திமுக மாநில மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், மாவட்ட அவைத் தலைவா் அருணாச்சலம், உடன்குடி ஒன்றியக்குழு தலைவா் பாலசிங், நகர திமுக செயலா் ஜான்பாஸ்கா் உட்பட பலா் கலந்துகொண்டனா்.