கோவில்பட்டி அருகே சாலையோரங்களில் கிடந்த 3,350 கிலோ ரேஷன் அரிசியை வருவாய்த் துறை அதிகாரிகள் கைப்பற்றினா்.
கோவில்பட்டியையடுத்த பிள்ளையாா்நத்தம் கிராமத்தில் உள்ள கோயில் அருகில், பல்வேறு தெருக்களில் ரேஷன் அரிசி மூடைகள் ஆங்காங்கே இருப்பதாக வட்ட வழங்கல் அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வட்ட வழங்கல் அலுவலா் சுப்புலட்சுமி தலைமையில், கிராம நிா்வாக அலுவலா் பாலமுருகன் மற்றும் நாலாட்டின்புத்தூா் போலீஸாா் அங்கு சென்று கோயில் உள்பட பல்வேறு தெருக்களில் கிடந்த தலா 50 கிலோ எடையுள்ள 67 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது.