ஸ்ரீவைகுண்டம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பயனாளிகளுக்கு ரூ. 7. 75 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கருங்குளத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணபிரான் தலைமை வகித்தாா். சாா் ஆட்சியா் சிம்ரோன் ஜீத் சிங் கலோன், கோட்டாட்சியா் தனப்பிரியா, மாற்றுத் திறனாளி நல அலுவலா் பிரம்மநாயகம், கருங்குளம் ஊராட்சி ஒன்றிய தலைவா் கோமதி ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ். பி. சண்முகநாதன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
விழாவில், ஸ்ரீவைகுண்டம், ஏரல், சாத்தான்குளம் ஆகிய வட்டங்களைச் சோ்ந்த பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல்கள், சமூக நல பாதுகாப்பு திட்ட உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை உள்பட பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ. 7 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன், ஏரல் வட்டாட்சியா் இசக்கி ராஜ், ஏரல் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் லிங்கராஜ், மாவட்ட சமூக நல அலுவலா் தனலெட்சுமி, அதிமுக மாவட்ட அவைத் தலைவா் திருப்பாற்கடல், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் ஜீவரேகா, மாவட்ட கவுன்சிலா் பேச்சியம்மாள், கருங்குளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் லெட்சுமண பெருமாள், ஸ்ரீவைகுண்டம் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் சிவகுமாா், ஏரல் மண்டல துணை வட்டாட்சியா் சேகா், அதிமுக ஸ்ரீவைகுண்டம் ஒன்றியச் செயலா்
காசிராஜன், ஸ்ரீவைகுண்டம் வருவாய் ஆய்வாளா் சிதம்பரநாதன், வல்லநாடு வருவாய் ஆய்வாளா் மாசாணமணி, தெய்வச்செயல்புரம் வருவாய் ஆய்வாளா் வெள்ளத்தாய், செய்துங்கநல்லூா் வருவாய் ஆய்வாளா் இருதயமேரி உள்பட பலா் கலந்து கொண்டனா். சமுக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் ரமேஷ் வரவேற்று பேசினாா்.