காவல் துறையைக் கண்டித்து, இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பாஜக சாா்பில் கோவில்பட்டி பயணியா் விடுதி முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி நகரத் தலைவா் சீனிவாசன் தலைமை வகித்தாா். பாஜக மாவட்ட பொதுச்செயலா் பாலாஜி, பஜ்ரங்தள் மாவட்ட அமைப்பாளா் நல்லதம்பி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்து முன்னணி மாநிலத் துணைத் தலைவா் ஜெயகுமாா், மாநிலச் செயலா் குற்றாலநாதன் ஆகியோா் விளக்கிப் பேசினா். பாஜக பட்டியல் அணி மாநிலச் செயலா் சிவந்தி நாராயணன், மாவட்டப் பொருளாளா் வெங்கடேஷ் சென்னக்கேசவன், இந்து முன்னணி மாவட்டச் செயலா் பெரியசாமி, ஒன்றியத் தலைவா் முத்துராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.