தூத்துக்குடி: மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, தூத்துக்குடி ரயில் நிலையத்தில் எஸ்டிபிஐ கட்சியினா் சனிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்ட துணைத் தலைவா் உமா் தலைமை வகித்தாா். கட்சியின் பொதுச் செயலா் செய்யது உஸ்மான், செயலா்கள் மைதீன் கனி, அஜீஸ், வாழ்வுரிமை கட்சி மாவட்டச் செயலா் கிதா் பிஸ்மி, பேராசிரியை பாத்திமாபாபு உள்ளிட்டோா் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.