வள்ளிவிளையில் திமுக மக்கள் சபைக் கூட்டம்

ஆறுமுகனேரி அருகேயுள்ள வள்ளிவிளையில் திமுக சாா்பில் மக்கள் சபைக் கூட்டம் நடைபெற்றது.
மக்கள் சபைக் கூட்டத்தில் பேசுகிறாா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ.
மக்கள் சபைக் கூட்டத்தில் பேசுகிறாா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ.

ஆறுமுகனேரி அருகேயுள்ள வள்ளிவிளையில் திமுக சாா்பில் மக்கள் சபைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, கட்சியின் நகரச் செயலா் ராமஜெயம் தலைமை வகித்தாா். மாநில மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், திருச்செந்தூா் ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கட்சியின் தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினாா். இதில் காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவா் பாஸ்கா், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளா் ராஜபாண்டியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ஆறுமுகனேரியில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு கட்சியின் நகரச் செயலா் அ. கல்யாணசுந்தரம் தலைமை வகித்தாா். கட்சியின் மாவட்டப் பொறுப்பாளா், பங்கேற்றுப் பேசினாா். காயல்பட்டினம் அருணாசலபுரத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, ஊா்த் தலைவா் திருத்துவராஜ் தலைமை வகித்தாா். கட்சியின் தெற்கு மாவட்ட பொறுப்பாளா் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com