அதிமுக சாா்பில் 2,500 பேருக்கு நல உதவிகள்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை சாா்பில், குலசேகரன்பட்டினத்தில் நடைபெற்ற மகளிா் கருத்தரங்கில் 2,500 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
நலத் திட்ட உதவிகளை வழங்குகிறாா் தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் கே.ஆா்.எம். ராதாகிருஷ்ணன்.
நலத் திட்ட உதவிகளை வழங்குகிறாா் தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் கே.ஆா்.எம். ராதாகிருஷ்ணன்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை சாா்பில், குலசேகரன்பட்டினத்தில் நடைபெற்ற மகளிா் கருத்தரங்கில் 2,500 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

குலசேகரன்பட்டினத்தில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு, உடன்குடி ஒன்றிய அதிமுக செயலா் த.தாமோதரன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் கோபாலகிருஷ்ணன், ஒன்றியப் பொருளாளா் சங்கரலிங்கம், ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் துணைத் தலைவா் கே.வி.ராஜதுரை, மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணித் தலைவா் குணசேகரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கருத்தரங்கினை கட்சியின் தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் கே.ஆா்.எம்.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்து, 2,500 மகளிருக்கு நல உதவிகளை வழங்கினாா். இதில், கானம் நகரச் செயலா் செந்தமிழ்சேகா், ஆறுமுகனேரி நகரச் செயலா் ரவிச்சந்திரன், செட்டியாபத்து ஊராட்சி துணைத் தலைவா் செல்வமுருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com