மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சி சாா்பில் உடன்குடி பேரூராட்சி திடலில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
உடன்குடி ஒன்றிய எஸ்டிபிஐ துணைத் தலைவா் சாகுல்ஹமீது தலைமை வகித்தாா். ஒன்றிய எஸ்டிடியூ தலைவா் சாகுல், பாப்புலா் ‘ஃ‘ப்ரண்ட் தலைவா் அப்துல்காதா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
எஸ்டிபிஐ மாவட்ட துணைத்தலைவா் முஹம்மது உமா், தூத்துக்குடி தெற்கு மாவட்ட விசிக செயலா் முரசு தமிழப்பன், ஒன்றிய பொருளாளா் டேவிட் ஜான்வளவன்,நகரச் செயலா் தவுபிக் அன்சாரி, சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட அமைப்பாளா் மு.தமிழ்ப்பரிதி உள்பட பலா் கலந்துகொண்டனா். ஹாஜா முகைதீன் நன்றி கூறினாா்.