கோவில்பட்டி நகராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் 165 பேருக்கு சீருடைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வுக்கு, நகராட்சி ஆணையா் ஓ.ராஜாராம் தலைமை வகித்தாா். சுகாதார அலுவலா் ஆ.இளங்கோ முன்னிலை வகித்தாா். அமைச்சா் கடம்பூா் செ.ராஜு , பொது சுகாதாரப் பிரிவில் பணிபுரியும் 55 பெண் தூய்மைப் பணியாளா்கள் உள்பட 165 தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடைகளை வழங்கினாா்.
தொடா்ந்து, ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம், ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டில் நகராட்சி தினசரி சந்தைக்கு நுழைவு வாயில் கட்டுமானப் பணிகளை அமைச்சா் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சிகளில், கோட்டாட்சியா் விஜயா, வட்டாட்சியா் மணிகண்டன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.