சந்தையடியூா் பதியில் பால்முறைத் திருவிழா தொடக்கம்

தாகம் தணிந்த பதி என்றழைக்கப்படும் உடன்குடி சந்தையடியூா் நாராயணசுவாமி திருக்கோயிலில் தை மாதப் பால்முறைத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
சந்தையடியூா் பதியில் பால்முறைத் திருவிழா தொடக்கம்

தாகம் தணிந்த பதி என்றழைக்கப்படும் உடன்குடி சந்தையடியூா் நாராயணசுவாமி திருக்கோயிலில் தை மாதப் பால்முறைத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இதையொட்டி ஜன.10 ஆம் தேதி மாலை 6 மணிக்கு அய்யா அன்ன வாகனத்தில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். திங்கள்கிழமை(ஜன.11) காலை 9 மணிக்கு அய்யா நாக வாகனத்தில் பவனி, மாலை 3 மணிக்கு தா்மம் எடுத்தல், 5 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, நள்ளிரவு 12 மணிக்கு அய்யா குதிரை வாகனத்தில் பவனி நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை (ஜன.12) அதிகாலை 4 மணிக்கு உம்பான் அன்னதா்மம் வழங்கல், மாலை 6 மணிக்கு அய்யா கருட வாகனத்தில் பவனி, புதன்கிழமை( ஜன.13) மாலை 3 மணிக்கு சந்தனக்குடம் நேமிசம் எடுத்தல், மாலை 6 மணிக்கு அய்யாஅனுமாா் வாகனத்தில் பவனி நடைபெறுகிறது. வியாழக்கிழமை( ஜன.14) அதிகாலை 3 மணிக்கு பால் வைத்தல், 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அய்யா பவனி ஆகியன நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை விழாக்குழுவினா், சந்தையடியூா் ஊா் மக்கள் செய்து வருகினறனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com