தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது திங்கள்கிழமை பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16 ஆயிரத்து 173 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 11 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து, இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோா் எண்ணிக்கை 15 ஆயிரத்து 957 ஆக அதிகரித்துள்ளது. இம் மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டு இதுவரை 141 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 75 போ் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.