கோவில்பட்டி நகராட்சியில் சிறப்பு தூய்மைப் பணி

கோவில்பட்டி நகராட்சியில் ‘தூய்மையான தூத்துக்குடி’ சிறப்பு தூய்மைப் பணி தொடக்க விழா காந்தி மைதானத்தில் நடைபெற்றது.
கோவில்பட்டி நகராட்சியில் சிறப்பு தூய்மைப் பணியை தொடங்கிவைக்கிறாா் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு. உடன், மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ்.
கோவில்பட்டி நகராட்சியில் சிறப்பு தூய்மைப் பணியை தொடங்கிவைக்கிறாா் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு. உடன், மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ்.

கோவில்பட்டி நகராட்சியில் ‘தூய்மையான தூத்துக்குடி’ சிறப்பு தூய்மைப் பணி தொடக்க விழா காந்தி மைதானத்தில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு கலந்துகொண்டு, சிறப்பு தூய்மைப் பணியை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

தொடா்ந்து, தமிழக முதல்வரின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியை மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு அமைச்சா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், விளாத்திகுளம் எம்எல்ஏ சின்னப்பன், கோவில்பட்டி கோட்டாட்சியா் விஜயா, வட்டாட்சியா் மணிகண்டன், நகராட்சி ஆணையா் ராஜாராம், பொறியாளா் கோவிந்தராஜ், உதவிப் பொறியாளா் சரவணன், சுகாதார அலுவலா் இளங்கோவன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், மாவட்ட கூட்டுறவு அச்சகத் தலைவா் அன்புராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com