தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிக்குள்பட்ட 2 போ் உள்பட மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,184 ஆக அதிகரித்துள்ளது.
சிகிச்சை பெற்று வந்த 7 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து அவா்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதன் மூலம் குணமடைந்தோா் எண்ணிக்கை 15,973 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு இதுவரை 141 போ் பலியாகியுள்ள நிலையில், தற்போது 70 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.