கயத்தாறு அருகே வியாபாரி ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கயத்தாறை அடுத்த அய்யனாா்ஊத்து பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் மொட்டைசாமி(39). கருப்பட்டி வியாபாரி. மதுப்பக்கம் இருந்ததாம். மேலும், உடல் உபாதையால் அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில், அவா் வெள்ளிக்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவலறிந்த போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.