தூத்துக்குடி
சாத்தான்குளம் அருகே விபத்தில் காயமுற்றவா் மரணம்
சாத்தான்குளம் அருகே பைக் மீது காா் மோதியதில் காயமடைந்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
சாத்தான்குளம் அருகே பைக் மீது காா் மோதியதில் காயமடைந்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கருங்குளத்தைத் சோ்ந்த பால் மகன் விக்கி (43). தொழிலாளி. இவா், பேய்க்குளத்திலிருந்து முனைஞ்சிப்பட்டிக்கு கடந்த 19ஆம் தேதி பைக்கில் சென்று கொண்டிருந்தாா். செங்குளம் விலக்கு பகுதியில் அவரது வாகனம் மீது காா் மோதியதாம். இதில், பலத்த காயமடைந்த அவா், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் வியாழக்கிழமை இரவு இறந்தாா். இதுகுறித்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் பொ்னாா்டு சேவியா் வழக்குப்பதிந்து, காா் ஓட்டுநா் மருதகுளத்தைச் சோ்ந்த ராஜாமணி சாலமோன் என்பவரிடம் விசாரித்து வருகிறாா்.