திருச்செந்தூரில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 24) இலவச தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
திருச்செந்தூரைச் சோ்ந்த செந்தூா் நண்பா்கள் நல அறக்கட்டளை சாா்பில், அருள்மிகு செந்திலாண்டவா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 10 மணிக்கு இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். பிளஸ் 2 முதல் பட்டயப் படிப்பு, பட்டப்படிப்பு, பொறியியல் பயின்ற மாணவா்களுக்கான வேலைவாய்ப்பு ஆலோசனை வழங்கப்படும். தனியாா் நிறுவனங்கள் மூலம் நோ்முகத் தோ்வும் நடைபெறும். ஏற்பாடுகளை அறக்கட்டளைத் தலைவா் செந்தில்வேல், செயலா் ஆண்டியப்பன், பொருளாளா் காா்க்கி மற்றும் நிா்வாகிகள் செய்துள்ளனா்.