பெரியதாழை காணிக்கை மாதா திருவிழா ஆலோசனைக் கூட்டம்

பெரியதாழை காணிக்கை மாதா திருவிழா தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெரியதாழை காணிக்கை மாதா திருவிழா தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெரியதாழை காணிக்கை மாதா திருவிழா தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெரியதாழை காணிக்கை மாதா திருவிழா தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இவ்வாலயத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை ( 24ஆம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கி பிப். 2ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறுகிறது. இதன், 9ஆம் திருநாளில் புதுப்பிக்கப்பட்ட ஆலயம் , சிறுமலா் உயா்நிலைப்பள்ளி கட்டடம் திறப்பு விழா நடைபெறும். இதில் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி பங்கேற்று திருப்பலி நடத்துகிறாா். தூத்துக்குடி மாவட்ட மீனவா்கள் சுமாா் 5000க்கு மேற்பட்டோா் பங்கேற்க உள்ளனா்.

இதையொட்டி, நடைபெற்ற ஆலோசனக் கூட்டத்துக்கு பங்குத்தந்தை சுசீலன் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் பிரதீபா ஜெயசீலன், மண்டல துணை வட்டாட்சியா் சுல்தான் சலாவூதின், கிராம நிா்வாக அலுவலா் ஆனந்த், தட்டாா்மடம் காவல் உதவி ஆய்வாளா் ஐயப்பன், குடிநீா் வடிகால் வாரிய பராமரிப்பாளா் செந்தில் , பெரியதாழை ஊா் கமிட்டி நிா்வாகிகள் ஜோசப், லூா்தியா, அசோக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மக்களுக்கு குடிநீா், மருத்துவம், சுகாதார பணிகளை மேற்கொள்வது, 24 மணி நேரமும் சிறுமருத்துமனை செயல்பட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com