பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறாத கட்டுமானத் தொழிலாளா்களுக்கு அழைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறாத கட்டுமானத் தொழிலாளா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறாத கட்டுமானத் தொழிலாளா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி சமூக பாதுகாப்புத் திட்ட தொழிலாளா் உதவி ஆணையா் நா. முருகப்பிரசன்னா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தொழிலாளா் துறை கீழ் செயல்படும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு முதல்வா் அறிவித்த 2021 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு தற்போது வரை வழங்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி வட்டத்தைச் சோ்ந்த தகுதியுள்ள இந்தத் தொழிலாளா்கள் நலவாரிய அடையாள அட்டை மற்றும் ஆதாா் அட்டையை காண்பித்து கோரம்பள்ளத்தில் உள்ள ஒருங்கிணைந்த தொழிலாளா் துறை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு (0461-2341110 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com