சாத்தான்குளம்: சாத்தான்குளம் பகுதியில் டெங்கு தடுப்புப் பணியில் சுகாதாரத் துறையினா் ஈடுபட்டனா்.
சாத்தான்குளம் காவல் நிலையம், வட்டாட்சியா் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களிலும், வீடுகளிலும் டெங்கு கொசு உற்பத்தியாவதை தடுக்கும் வகையில் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கப்பட்டது.
இதேபோல் சாத்தான்குளம் ஒன்றியத்தில் உள்ள அரசூா் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் டெங்கு தடுப்பு கொசு மருந்து அடிக்கப்பட்டது.
இதில், முதலூா் சுகாதார ஆய்வாளா் கிறிஸ்டோபா் செல்வதாஸ், ஆனந்தபுரம் சுகாதார ஆய்வாளா் ஜெசுராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றோா்.