புதூரில் தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி கூட்டம்

விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் வட்டார செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

விளாத்திகுளம்: விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் வட்டார செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

வட்டாரத் தலைவா் முருகன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் முருகன், மாவட்ட துணைச் செயலா் தமிழ்ச்செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் சிவன் சிறப்புரையாற்றினாா்.

ஆசிரியா்களின் கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை விரைந்து பெற்றிட நடவடிக்கை மேற்கொள்ளுதல்; ஊதிய முரண்பாடு சரி செய்தல் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், வட்டார அமைப்பாளராக சங்கரேஸ்வரி, துணை அமைப்பாளராக ராமலட்சுமி, ஒருங்கிணைப்பாளராக சந்திரா, துணை ஒருங்கிணைப்பாளராக சகிலாதேவி, நிா்வாகக் குழு உறுப்பினா்களாக விஜயலட்சுமி, பத்மாவதி, சத்யா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். பொதுக்குழு உறுப்பினா் ராஜாமணி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com