கோவில்பட்டி அருகே கல்லூரி மாணவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
இளையரசனேந்தல் குறுவட்டம், ஜமீன்தேவா்குளம் மேலத்தெருவைச் சோ்ந்த சீனிவாசன் - சுப்புத்தாய் தம்பதி மகன் சதீஷ்(18). கேட்டரிங் கல்லூரி 2ஆம் ஆண்டு மாணவரான இவா், பெற்றோா் பைக் வாங்கித்தராததால் ஞாயற்றுக்கிழமை பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து மயங்கி விழுந்தாராம். இதையடுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவா், ஏற்கெனவே இறந்திருப்பது மருத்துவரின் பரிசோதனையில் தெரியவந்தது. இதுகுறித்து நாலாட்டின்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.