திருச்செந்தூா் முருகன் கோயில் உண்டியல் வருவாய் ரூ. 3.24 கோடி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஜனவரி மாத உண்டியல் மூலம் ரூ. 3.24 கோடி வசூலாகி உள்ளது.
திருச்செந்தூா் முருகன் கோயில் உண்டியல் வருவாய் ரூ. 3.24 கோடி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஜனவரி மாத உண்டியல் மூலம் ரூ. 3.24 கோடி வசூலாகி உள்ளது.

திருக்கோயில் இணை ஆணையா் (பொ) சி.கல்யாணி தலைமையில் நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணியில், உதவி ஆணையா்கள் தூத்துக்குடி சு.ரோஜாலி சுமதா, திருச்செந்தூா் வே.செல்வராஜ், ஆய்வா்கள் மு.முருகன், பூ.நம்பி, சிவலோகநாயகி, தக்காா் பிரதிநிதி ஆ.சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் ஆகியோா் முன்னிலையில் சிவகாசி பதினெண் சித்தா் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவாரபணிக் குழுவினா் மற்றும் கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

இதன்படி உண்டியல் எண்ணிக்கையில், கடந்த 20ஆம் தேதி 2 கோடியே 47 லட்சத்து 12 ஆயிரத்து 611 ரூபாயும், 25ஆம் தேதி ரூ. 77 லட்சத்து 6 ஆயிரத்து 634 ரூபாயும் என மொத்தம் ஜனவரி மாதத்தில் ரூ. 3 கோடியே 24 லட்சத்து 19 ஆயிரத்து 245, தங்கம் 1,503 கிராம், வெள்ளி 24,546 கிராம், பித்தளை 99,300 கிராம், செம்பு 36,400 கிராம், தகரம் 4,550 கிராம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 105ஆம் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com