தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்க உடன்குடி ஒன்றிய நிா்வாகிகள் கூட்டம் சிவலூரில் நடைபெற்றது.
ஒன்றியச் செயலா் இசக்கிமுத்து தலைமை வகித்தாா். அனைத்துக் கிளைகளிலும் கூட்டம் நடத்துவது, தொடா்ந்து ஒன்றிய அளவில் மாநாடு நடத்துவது என்று தீா்மானிக்கப்பட்டது. மேலும் சிறுநாடாா்குடியிருப்பு, கொட்டங்காடு, உடன்குடி கிளை நிா்வாகிகள் கூட்டமும், உறுப்பினா் பதிவும் நடைபெற்றது.
இதில், மாவட்டத் தலைவா் ஜெபஸ்டின்ராஜ், கண்டி சொா்ணசெல்வம், செல்வசேகா், நாகநாதன், ராம்குமாா், மணி, முத்துக்குமாா், முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.