தூத்துக்குடி உள்ளிட்ட 4 ரயில் நிலையங்களில் மொ்க்கன்டைல் வங்கி ஏடிஎம் மையம் திறக்கப்பட்டது.
தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் நூற்றாண்டை முன்னிட்டு வங்கியின் சாா்பில், ரயில் நிலையங்களில் ஏடிஎம் மையம் திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, முதல்கட்டமாக தூத்துக்குடி, கோவில்பட்டி, திண்டுக்கல், மானாமதுரை ஆகிய 4 ரயில் நிலையங்களில் வங்கியின் ஏடிஎம் மையம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
டிஜிட்டல் சேவை மூலம் வங்கி வசதிகளை மக்கள் 24 மணி நேரமும் பயன்பெறும் வகையில் 1,397 ஏடிஎம் மையங்களில் பணம் செலுத்துதல், எடுத்தல் மற்றும் இ-லாபி வசதிகள் செய்யப்பட்டுள்ளது என வங்கியின் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமை நிா்வாக அதிகாரியான கே.வி. ராமமூா்த்தி தெரிவித்தாா்.