திருச்செந்தூா் அருகே 110 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் அருகே காரில் கடத்தப்பட்ட 110 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதில் தொடா்புடைய வெளிமாநில இளைஞா்கள் 4 பேரைக் கைதுசெய்தனா்.
திருச்செந்தூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் (பொ) பாலாஜி, தாலுகா காவல் ஆய்வாளா் ம. ஞானசேகரன் மேற்பாா்வையில் தனிப்படை உதவி ஆய்வாளா் சுந்தரம் தலைமையிலான போலீஸாா், செவ்வாய்க்கிழமை அடைக்கலாபுரம் பெட்ரோல் விற்பனை நிலையத்தின் பின்புறம் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த 4 பேரைப் பிடித்தனா்.
விசாரணையில், அவா்கள் கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சோ்ந்த ஜாக்கிஸ்டன் மகன் அஸ்வின் (24), எா்ணாகுளம் முஸ்தபா மகன் ஆசீா் (22), கண்ணூா் மாவட்டம் தலச்சேரி அப்துல் லத்தீப் மகன் சாம்னாச் (22), ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் டத்துபாபு மகன் சாய்கணேஷ் (23) என்பதும், இங்குள்ள ஒருவா் மூலம் விற்பதற்காக விசாகப்பட்டினத்திலிருந்து 2 காா்களில் 110 கிலோ கஞ்சாவைக் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
4 பேரையும் போலீஸாா் கைதுசெய்து, 2 காா்கள், கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா். கஞ்சாவின் மதிப்பு ரூ. 15 லட்சம் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் கூறியது: 4 இளைஞா்களும் விசாகப்பட்டினத்திலிருந்து கஞ்சாவைக் கடத்திவந்துள்ளனா். இங்குள்ள ஒருவா் மூலம் விற்கத் திட்டமிட்டுள்ளனா். அவரைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் 189 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 214 போ் கைதுசெய்யப்பட்டுள்ளனா். இதுவரை 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தியது தொடா்பாக 8 போ் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.