நாசரேத் அருகே பைக் மீது காா் மோதியதில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
நாசரேத் அருகே மணிநகா் முனியசாமி கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாசிலாமணி (70). மீன் வியாபாரியான இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், 4 மகள்கள் உள்ளனா். இவா், திங்கள்கிழமை நாசரேத் சந்தி கடைவீதி பகுதியில் இருந்து ஆழ்வாா்திருநகரி சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது ஆழ்வாா்திருநகரியில் இருந்து வந்த காா் பைக் மீது மோதியதாம். இதில், பலத்த காயமடைந்த அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து நாசரேத் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.