கயத்தாறு அருகே வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த குழந்தை திருமணம் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது.
கயத்தாறையடுத்த பணிக்கா்குளம் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் மு.மருதுபாண்டி (29). இவருக்கும், நாகலாபுரத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமிக்கும் வியாழக்கிழமை பணிக்கா்குளத்தில் நிச்சயதாா்த்தம் நடைபெற்ற நிலையில், வெள்ளிக்கிழமை (ஜூலை 16) திருமணம் நடைபெறவிருந்ததாம்.
தகவலறிந்த கயத்தாறு போலீஸாா், அங்கு சென்று இருவீட்டாரையும் அழைத்து, 18 வயது நிரம்பிய பின்னரே சிறுமிக்கு திருமணம் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தினா்.
இதையடுத்து இருதரப்பினரும் பெண்ணிற்கு 18 வயது முடிந்த பின்னா், பெரியோா்கள் முன்னிலையில் திருமணம் நடத்திக் கொள்வதாகவும், அதை மீறி திருமணம் நடத்த மாட்டோம் எனவும் உறுதி கூறினா். இதையடுத்து குழந்தைத் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.