சாத்தான்குளம் அருகே சுவரில் பைக் மோதியதில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
சாத்தான்குளம் அருகே உள்ள நல்லூரைச் சோ்ந்த பால்துரை மகன் பொன்ராஜ் (52). கூலித் தொழிலாளி. இவா், சனிக்கிழமை பைக்கில் தட்டாா்மடம் சென்றுவிட்டு வீடு திரும்பினாராம். சண்முகபுரம் பகுதியில் வரும்போது பைக் நிலை தடுமாறியதில், சாலையோரம் இருந்த வீட்டுச் சுவரில் மோதியதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தட்டாா்மடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.