பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உயா்வைக் கண்டித்தும், அவற்றை மத்திய அரசு கட்டுப்படுத்த வலியுறுத்தியும், விலை உயா்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடைபெற்றது.
கட்சியின் புகா் செயலா் ராஜா தலைமை வகித்தாா். போராட்டத்தில் பங்கேற்றோா் இருசக்கர வாகனத்தை பாடைக் கட்டி தூக்கிச்சென்றதுடன், மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனா்.